பாராசூட்டில் பறந்து விழிப்புணர்வு செய்யும் தேர்தல் அதிகாரி: சென்னையில் ருசிகரம்

  • சென்னையில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் பாராசூட்டில் பறந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

ஒவ்வொரு தேர்தல் நடைபெறும் போதும் வயதிற்கு வந்த அனைத்து குடிமக்களையும் வாக்களிக்க வைத்து, 100% வாக்குப்பதிவைப் பெற வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் மிகுந்த சிரத்தை எடுக்கும். இந்த முறையும் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை முன்வைத்து சென்னை மாவட்ட தேர்தல் நிர்வாகம் சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

வாகன பேரணி நிறைவடைந்ததையடுத்து,மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் அங்கு பாராசூட்டில் பறந்து சென்று தேர்தல் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை பறக்கவிட்டார்.

பின்னர் பேசிய அவர் , அறியாமை காரணமாகவே சென்னையில் வாக்கு சதவிகிதம் குறைவாக உள்ளதாகவும், இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் அவர்களுக்குஒரு தெளிவு ஏற்பட்டு வாக்களிப்பார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

author avatar
Srimahath

Leave a Comment