தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக பழனிக்குமாரை மறு நியமனம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக பழனிக்குமாரை மறு நியமனம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். மாநில தேர்தல் ஆணையராக பழனிக்குமார் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 9-ஆம் தேதி வரை பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 இல் மாநில தேர்தல் ஆணையராக தேர்வான பழனிக்குமார் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் தற்போது அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.