இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் இறந்தவர்கள் அப்பாவி மக்கள்-தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம்

எல்லையில் நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஸ்மீர் மாநிலத்தில் சுமார் 36 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சண்டையில்  7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.வெள்ளை கொடி உடன் வந்து அந்த 7 பேரின் உடலை எடுத்த செல்லுமாறு இந்திய இராணுவம் கூறியது.

இந்த நிலையில் சமூக வலைதளமான ட்விட்டரில் இம்ரான் கான் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,  இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் இறந்தவர்கள் அப்பாவி மக்கள்.காஷ்மீர் பிரச்சனையில் சமரசம் செய்ய அமெரிக்க  அதிபர் டிரம்ப் விடுத்த வேண்டுகோளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் இந்தியா அச்சுறுத்தலாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.