பாகிஸ்தானில் பயணிகள் வேன் ஒன்று கால்வாயில் விழுந்த நிலையில், இதில் பயணம் செய்த 7 குழந்தைகள் உட்பட 11 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் குஜ்ரன்வாலா எனும் மாவட்டத்தில் ஒரு குடும்பத்தினர் உறவினர்களை சந்திப்பதற்காக வேன் ஒன்றில் சென்றுள்ளனர். அதன் பின் உறவினர்களை சந்தித்து விட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் அவர்களது வேன் பஞ்சாப் மாகாணத்தின் ஷேகுபுரா எனும் மாவட்டத்தில் உள்ள கான்குவா டோக்கன் எனும் பகுதியில் வந்தபோது அங்கு இருந்த கால்வாயில் எதிர்பாராதவிதமாக வேன் கவிழ்ந்து விழுந்து உள்ளது.
அப்பொழுது அதிலிருந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் என அனைவரும் சிக்கியுள்ளனர். இதனை அடுத்து நீரில் மூழ்கியதில் 7 குழந்தைகள் உட்படமொத்தம் பதினொரு பேர் பலியாகியுள்ளனர். ஓட்டுநர் வேனை மிக வேகமாக ஓட்டி சென்றதால் உடனடியாக நிறுத்த முடியவில்லை எனவும், இதனால் கட்டுப்பாட்டை மீறி கால்வாயில் விழுந்து விட்டது எனவும் அந்த சம்பவ இடத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் கூறியுள்ளார். தற்பொழுது இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் 7 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Realme C65 5G : பட்ஜெட் விலையில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில், ரியல்மி (Realme) நிறுவனம் அதன் சி-சீரிஸின் புதிய ஸ்மார்ட் போனான ரியல்மி C65…
Yes Bank : யெஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் தங்களது கணக்கில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்துருக்க வேண்டும் என்று ஒரு சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர்.…
பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…
Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…
Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…
Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…