கோலியின் உலக சாதனையை சமன்செய்த பாக். கேப்டன் பாபர்

விராட் கோலியின் உலக சாதனையை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், சமன் செய்துள்ளார்.

இந்தியாவின் விராட் கோலி டி-20 கிரிக்கெட்டில் 81 இன்னிங்சில் மட்டுமே ஆடி அதிவேகமாக 3000 ரன்களை கடந்தவர் என்ற சாதனை படைத்திருந்தார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தற்போது இந்த சாதனையை சமன் செய்துள்ளார். அவரும் 81 இன்னிங்ஸ் விளையாடி இந்த சாதனை படைத்துள்ளார்.

தற்போது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இங்கிலாந்து அணி 7 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளயாடுகிறது. நேற்று நடந்த 6ஆவது போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 170 ரன்கள் என்ற இலக்கை 14.3 ஆவது ஒவரிலேயே எளிதாக அடித்து இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர் 3-3 என சமநிலையில் உள்ளது.

இந்த தொடர் முழுவதுமாக சிறப்பாக விளையாடி வரும் பாபர் அசாம், இங்கிலாந்துக்கு எதிரான 6 ஆவது டி-20 போட்டியில் அதிரடியாகவிளையாடி 59 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், பாபர் அசாம் தனது 81 ஆவது இன்னிங்சில் 3000 ரன்களைக் கடந்து விராட் கொள்யின் சாதனையை சமன் செய்துள்ளார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment