#BREAKING : பதவியை ராஜினாமா செய்தார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே..!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டம் தீவிரமாக அரசு மாளிகைகள் பொதுமக்களால் சூழப்பட்டு இருக்கிறது. இதனால், ஜனாதிபதி, பிரதமர் என பொதுமக்களிடம் இருந்து தப்பியோடி உள்ளனர். இலங்கையில், தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கோத்தபய ராஜபக்ஷே தனது ராஜினாமா குறித்து பிரதமர் ரனிலுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. … Read more

தொடங்கியது பொதுக்குழு கூட்டம்..! ஓபிஎஸ் கலந்து கொள்வாரா..?

அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ள நிலையில், ஓபிஎஸ் கலந்து கொள்ளவில்லை.  சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக தமிழ்மகன் உசேன்  தலைமையில், செயற்குழு கூட்டம்நடைபெறுகிறது. அதிமுகவின் தற்போதைய நிலை குறித்த விவாதம் மற்றும் பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றுவது தொடர்பாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ்-க்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் செயற்குழு – பொதுக்குழு கூட்டம் … Read more

#Breaking:அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி – உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு!

சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு சற்று நேரத்தில் நடைபெறவுள்ளது.இதற்கான ஏற்பாடுகள் ஈபிஎஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில்,அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்து பொதுக்குழுவை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.கட்சி விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழுவை நடத்த வேண்டும் என ஈபிஎஸ் தரப்புக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து,ஓபிஎஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தை நாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சகட்ட பரபரப்பு…கடும் மோதல்;தடையை உடைத்து தலைமை அலுவலகம் நுழைந்த ஓபிஎஸ்!

சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு சற்று நேரத்தில் நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு,பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு ஈபிஎஸ் சென்றுள்ளார். அதே சமயம்,தனது வீட்டின் முன்பு உள்ள ஏராளமான தொண்டர்கள், ஆதரவாளர்களை சந்தித்துவிட்டு,தற்போது பிரச்சார வாகனத்தில் தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் வந்துள்ளார்.இதனிடையே,சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது.குறிப்பாக,ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்கியதில் ஓபிஎஸ் ஆதரவாளர்களில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும்,ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவருக்கு கத்திகுத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.மேலும்,கட்டை,கம்புகள்,கற்களை எறிந்தும் இரு தரப்பினரும் கடும் … Read more

#Breaking:பெரும் பதற்றம்…ஓபிஎஸ் வாகனம் மீது தாக்குதல்;ஆதரவாளருக்கு கத்திக்குத்து!

சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு இன்று நடைபெறவுள்ளது.இந்த வேளையில்,சென்னையில் உள்ள தனது இல்லத்திலிருந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் வந்து கொண்டிருக்கிறார்.பொதுக்குழுவுக்கு ஈபிஎஸ் சென்று கொண்டிருக்கும் நிலையில்,தனது வீட்டின் முன்பு உள்ள ஏராளமான தொண்டர்கள், ஆதரவாளர்களை சந்தித்துவிட்டு,தற்போது பிரச்சார வாகனத்தில் தலைமை அலுவலகத்திற்கு சற்று நேரத்தில் ஓபிஎஸ் வரவுள்ளார். அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பளிக்கவுள்ள நிலையில்,தற்போது ஓபிஎஸ் கட்சி தலைமை … Read more

#Breaking:இல்லம் to அதிமுக தலைமை அலுவலகம் – புறப்பட்டார் ஓபிஎஸ்!

சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு இன்று நடைபெறவுள்ளது.இந்நிலையில்,எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்திலிருந்து பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்.கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவுக்கு பசுமைவழிச்சாலையில் உள்ள தனது இல்லத்திலிருந்து 3 மணி நேரம் பயணம் செய்து தாமதமாக சென்ற நிலையில்,அதனை முன் அனுபவமாக எடுத்துக் கொண்ட ஈபிஎஸ்,இந்த முறை 9 மணிக்கு முன்னரே பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு செல்ல காலை 6.30 மணிக்கே புறப்பட்டுள்ளார்.கடந்த முறை நடைபெற்ற பொதுக்குழுவுக்கு காரில் … Read more

#Flash:தமிழகம் முழுவதும்…மாதம் ரூ.1,000;3.58 லட்சம் மாணவிகள் விண்ணப்பம் – உயர்கல்வித்துறை!

மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி மேம்பாட்டு திட்டம் மூலம்,பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்க 12 ஆம் வகுப்பு முடித்த அரசுப் பள்ளி மாணவியர்கள் கல்லூரியில் சேர்ந்து அவர்களின் படிப்பு முடியும் வரை வங்கிக் கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் நேரடியாக செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி,மாதம் ரூ.1000 பெரும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முன்னதாக ஜூன் 30 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்,ஜூலை 10 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில்,மூவலூர் … Read more

#NEET2022:மாணவர்களே…ஜூலை 17 நீட் தேர்வு;இன்று முதல் ஹால் டிக்கெட் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள 546 நகரங்களிலும்,இந்தியாவிற்கு வெளியே உள்ள 14 நகரங்களிலும் அமைந்துள்ள வெவ்வேறு மையங்களில் வருகின்ற ஜூலை 17-ம் தேதி நீட் இளங்கலை(யுஜி) படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.குறிப்பாக,நீட் யுஜி தேர்வானது தமிழ்,உருது,ஆங்கிலம், இந்தி,மராத்தி,அஸ்ஸாமி,ஒடியா,குஜராத்தி,பெங்காலி,பஞ்சாபி,கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் உட்பட 13 வெவ்வேறு மொழிகளில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில்,நீட் யுஜி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.அதன்படி,இன்று காலை 10 மணிக்கு ஹால் … Read more

#Breaking:பொதுக்குழுவுக்கு புறப்பட்ட ஈபிஎஸ்;கடந்த முறை கார்;இந்த முறை?..!

சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு இன்று நடைபெறவுள்ளது.இந்நிலையில்,எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்திலிருந்து பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு செல்ல புறப்பட்டுள்ளார்.கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவுக்கு பசுமைவழிச்சாலையில் உள்ள தனது இல்லத்திலிருந்து 3 மணி நேரம் பயணம் செய்து தாமதமாக சென்ற நிலையில்,அதனை முன் அனுபவமாக எடுத்துக் கொண்ட ஈபிஎஸ்,இந்த முறை 9 மணிக்கு முன்னரே பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு செல்ல சற்று முன்னதாக புறப்பட்டுள்ளார்.கடந்த முறை நடைபெற்ற பொதுக்குழுவுக்கு காரில் சென்ற … Read more

பரபரப்பு…அதிமுக பொதுக்குழு நடைபெறுமா? – இன்று காலை நீதிமன்றம் தீர்ப்பு!

அதிமுக பொதுக்குழுவுக்கு ஓபிஎஸ் தடை கோரிய வழக்கில் இன்று காலை 9 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு. சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு இன்று நடைபெறவுள்ளது.இதற்கான ஏற்பாடுகள் ஈபிஎஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அந்த வகையில்,பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள பேனர்களில் ஓபிஎஸ் படங்கள் ஏதும் இடம் பெறவில்லை.மேலும்,பொதுக்குழுவுக்கு வரும் உறுப்பினர்களுக்கு QR Code பொருந்திய அடையாள அட்டை தரப்பட்டுள்ளது. இதனிடையே,அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடைகோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது இரு தினங்களுக்கு … Read more