biggboss 3: கொதித்தெழுந்த லொஸ்லியா! நான் சம்பந்தப்பட்ட விஷயத்தை யாரும் கதைக்க வேண்டாம்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். மேலும், இந்த வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வனிதா விஜயகுமார் வருகை தந்துள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் கவினுக்கும், மதுமிதாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கவின் மதுமிதாவிடம், இந்த பிரச்சனைய யாருயாரு யூஸ் பண்றங்கனு பாக்கணும். இதனையடுத்து, மதுமிதா, … Read more

செல்போனால் குளியல் வாளியில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சோகம்!

திருவள்ளூர் மாவட்டம் வெங்கால் பகுதியை சார்ந்த முருகன்.இவரது ஒன்றரை வயது மகன் அருண்.முருகன் வாளில் தண்ணீரை வைத்து அருணை குளிப்பாட்டுவது வழக்கம்.இதை தொடர்ந்து நேற்றும் முருகன் வாளில் முழுவதும் தண்ணீர் நிரப்பி வைத்து அருணை குளிப்பாட்ட தயாராக இருக்கும் போது முருகனுக்கு ஒரு போன் கால் வந்து உள்ளது. முருகன் அப்போது போன் பேச சென்று விட்டார் தனியாக இருந்த அருண் வாளில் நிரப்பி இருந்த  தண்ணீரில்  மூழ்கி உயிருக்கு போராடி கொண்டு இருந்தார்.அப்போது முருகன் அருணை … Read more

எனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை! யாரையும் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் : நடிகை வரலட்சுமி

நடிகை வரலட்சுமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை ஆவார். இவர், எஸ்.முத்துக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கன்னி ராசி’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை வரலட்சுமி நடித்துள்ளார். இப்படத்தில், பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர் மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம், காதல் திருமணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு, சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகை வரலட்சுமி, பொதுவாகவே எனக்கு புது இயக்குனர்கள் என்றால் மிகவும் … Read more

திருடர்களை விரட்டி அடித்த வீரத்தம்பதிக்கு தமிழக அரசின் சார்பாக சிறப்பு விருது!?

நெல்லையில் சில நாட்களுக்கு முன்னர் சண்முகவேல் மற்றும் அவரது மனைவி செந்தாமரை அவர்களது தோட்ட வீட்டில் தனியாக இருந்தபோது, இரண்டு திருடர்கள் அரிவாளோடு   தாக்கி திருட முயற்சித்தனர். அரிவாளோடு அவர்கள் இருந்தாலும் இந்த வயதான தம்பதியினர் கொஞ்சமும் அச்சமின்றி, அவர்களை அடித்து விரட்டினர். கையில் கிடைத்த பொருளை எடுத்து அவர்கள்மீது வீசி விரட்டினர். அரிவாளுடன் திருடர்கள் இருந்தாலும் அவர்களை கண்டு பயப்படாமல் விரட்டி அடித்த இந்த வீரத்தம்பதியை பலரும் பாராட்டி வருகின்றனர். இவர்களுக்கு வீரதீர செயல்கள் … Read more

கனமழையால் நீலகிரி மற்றும் கோவையில் பாதிப்பு !முதலமைச்சர்  பழனிசாமி தலைமையில் ஆலோசனை

நீலகிரி மற்றும் கோவையில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக முதலமைச்சர்  பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தென்மேற்கு பருவ மழை தற்போது தீவிரமடைந்துள்ளது.இதன்காரணமாக கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை பெய்து  வருகிறது.தமிழகத்தை பொறுத்தவரை கோவை,நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்தது. குறிப்பாக நீலகிரியில் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளதால் அவற்றை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மேலும் பல்லாயிரக்கணக்கான  மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.நேற்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் நீலகிரியில் ஆய்வு … Read more

400 பேருக்கு “பிகில்” மோதிரம் வழங்கிய தளபதி விஜய் !

நடிகர் விஜய் , இயக்குனர் அட்லீ உடன் மூன்றாவது முறையாக இணைந்து உள்ள படம் “பிகில்”  இப்படத்தை  ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.இப்படத்திற்கு இசைப்புயல் ஏ . ஆர் ரகுமான் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் நயன்தாரா ,விவேக் ,யோகிபாபு ,மற்றும் கதிர் ஆகியோர் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த சில நாள்களுக்கு முன் இப்படத்தில் இடம்பெற்ற “சிங்க பெண்ணே ” … Read more

குறைந்தது தங்கம் விலை! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்த வண்ணம் இருந்தது. இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இன்றைய தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.408 குறைந்து, ரூ.28.608-க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.51 குறைந்து, ரூ.3,576-க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி கிராமுக்கு ரூ.1.60 குறைந்து, ரூ.47.40-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை சரிவை கொண்டுள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அத்திவரதர் கோவில் வளாகத்தில் பிரசவம் !

காஞ்சிபுரம்  வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இதை அடுத்து கடந்த மாதம் ஜூலை 1-ம் தேதியில் இருந்து இன்றுடன் 45 நாள்களாக  காட்சியளித்து வருகிறார். நாளை மறுநாளுடன் அத்திவரதர் தரிசனம் முடிகிறது. இதனால் பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது.இன்று அத்திவரதரை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர் .இந்நிலையில் இன்று விஜயா என்ற கர்ப்பணி பெண் அத்திவரதரை தரிசனம் செய்ய வந்து உள்ளார். அத்திவரதரை தரிசனம் செய்ய … Read more

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க குடும்பத்துடன் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

காஞ்சிபுரம் அத்திவாரத்தை காண நாள் தோறும்  லட்சக்கணக்காகில் பக்தர்கள் வந்து தரிசித்து விட்டு செல்கின்றனர்.  நாளை மறுநாள் அத்திவரதரை தரிக்க கடைசி நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாகி வருகிறது. அத்திவரதரை தரிசிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போன்று அரசியல் தலைவர்களும் தரிசித்து சென்றனர். இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தும் தனது குடும்பத்தோடு அத்திவரதரை தரிசிக்க நேற்று இரவு சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது

விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது. பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காஷீமீர் புல்வாமா பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து இந்திய ராணுவம் விமானப்படையின் மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி கொண்டார். பிறகு இவரை 58 மணிநேரம் கழித்து பாகிஸ்தான் ராணுவம் இவரை விடுவித்தது. இதன் பிறகு … Read more