கூட்டுறவு வங்கியில் பூட்டை உடைத்து பலகோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடிக்க முயற்சி!

ராமநாதபுரத்தில் இயங்கிவரும் கூட்டுறவு வங்கியில் நேற்றிரவு பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது. இந்த முயற்சி பின்னர் கைவிடப்பட்டு கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். நேற்று நள்ளிரவு இந்த சம்பவம் நடைபெற்றதாக ஊர்மக்கள் தெரிவித்தனர். மேலும் வங்கியை சில நாட்களாக சந்தேகிக்கப்படும் வகையில் இருவர் நோட்டமிட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த கொள்ளை நடைபெறாததால், கூட்டுறவு வங்கியில் இருந்த கோடிக்கணக்கான மதிப்பிலான நகைகள், முக்கிய பத்திரங்கள் தப்பித்தன என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தளபதி ரசிகர்களுக்கு மற்றுமொறு ட்ரீட்! இன்று மாலை காத்திருக்கு வெறித்தனம்

தளபதி விஜய்  இயக்குனர் அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் பிகில் திரைப்படம்.இந்த படத்தில் நயன்தாரா,கதிர்,விவேக் ,யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்து  வருகிறது.மேலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் படத்திற்கு இசை அமைத்துள்ளார். பிகில்  படத்தின் இசை வெளியீட்டு விழா  வருகின்ற 19 ஆம்தேதி (அதாவது நாளை ) நடைபெறுகிறது.இந்த  நிலையில் இன்று மாலை 4.30 மணிக்கு உனக்காக என்ற பாடலின் சிங்கிள் டிராக் வெளியாகிறது.இந்த பாடலுக்கான போஸ்டரில் பிகில் படத்தில் முதல்முறையாக நயன்தாராவுடன் … Read more

நீதாண்டி எனக்குள்ள! இவரு பாடகரா இருப்பாரோ? வைரலாகும் வீடியோ!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிக்லஸியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் இல்லத்தில், பல சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது. இதனையடுத்து, முகன் நீதாண்டி எனக்குள்ள என்ற பாடலை பாடுகிறார். அதற்கு கவின் தாளம் தட்டுகிறார். இதோ அந்த வீடியோ,   View this post on Instagram … Read more

வங்கிக்குள் கொலை முயற்சி! துப்பாக்கியால் சுட்டு காப்பாற்றிய காவலாளி!

மானாமதுரரையில் சில மாதங்களுக்கு முன்னர் அமமுக பிரமுகர் சரவணன் வெட்டி கொலைசெய்யப்பட்டார். இதற்க்கு பழிவாங்கும் நோக்கில் மானாமதுரையில் உள்ள வங்கியில் கொலைமுயற்சி நடைபெற்றுள்ளது. சரவணன் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில், தங்கமணி என்பவரை கொலை செய்வதற்காக, அவரை பின் தொடர்ந்து, மானாமதுரையில் உள்ள ஒரு வங்கிக்குள் சென்ற தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது கொலைகார நண்பரும், தங்கமணியை கொலை செய்ய  தாக்கியுள்ளார்கள். உடனே சுதாரித்துக்கொண்ட வங்கி காவலாளி தான் வைத்திருந்த துப்பாக்கியால் தங்கமணியை தாக்கிய தமிழ்ச்செல்வனை சுட்டுவிட்டார். இதனால் காயமடைந்த … Read more

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் ! காவல்துறையில் புகார்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்ற மாணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை சென்னையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மும்பையில்  எழுதினார்.தேர்வில் வெற்றி பெற்றதையடுத்து தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார் அந்த நபர். இந்த மாணவரின் நீட் நுழைவு சீட்டு ( ஹால் டிக்கெட் ) புகைப்படமும், தற்போது  தேனி மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக எடுக்கப்பட்ட புகைப்படமும், வெவ்வேறாக இருந்ததால், கல்லூரி நிர்வாகத்திற்கு சந்தேகம் … Read more

சின்னத்திரை நடிகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிரபல பாடகி!

என்.எஸ்.கே.ரம்யா 2008-ம் ஆண்டு வெளியான ‘பந்தயம்’ என்ற படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானவர். அதனை தொடர்ந்து இவர் 50க்கும் மேற்பட்ட தமிழ் பாடல்கள் பல பாடியுள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற பாடல்களையும் பாடியுள்ளார். இவர் கமலஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், ஏற்கனவே திருமணம் செய்து கொண்ட ரம்யா, கருது வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளார். இதனையடுத்து, பிரபல சின்னத்திரை நடிகரான சத்யாவை … Read more

காலி மனைகளில் உள்ள குப்பைகளை அகற்றாவிட்டால் அவை மக்கள் பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும்!

சேலம்த்தில், தற்போது மாநகராட்சி நிர்வாகம் புதிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், காலிமனைகளில் உள்ள குப்பைகள், அதில் இருந்த முட்புதர்களை அகற்றவேண்டும்  மனையின் உரிமையாளர்கள் அகற்றவேண்டும். அப்படி அகற்றாவிட்டால், மாநகராட்சி ஊழியர்கள் அகற்றவிட்டு அந்த காலி மனைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுவிடும் என அதிரடி அறிவிப்பை சேலம் மாநகராட்சி அறிவித்துள்ளது. காலிமனைகளில் உள்ள குப்பைகளை அகற்ற சொல்லி, ஏற்கனவே பல முறைசொல்லியும், மனை உரிமையாளர்க்ளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி … Read more

பொதுவான மொழி இருந்தால் நல்லது,ஆனால் இந்தியை திணித்தால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்-ரஜினிகாந்த்

இந்தி மொழியை திணித்தால்  ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில் ,இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இவரது இந்த கருத்துக்கு எதிராக  தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  பொதுவான மொழி என்று ஓன்று இருந்தால் அது நாட்டின் … Read more

மாற்றுத்திறனாளி என்று கூறாதீர்கள்! எல்லாரும் கடவுளின் குழந்தைகள்!

நடிகை சாக்ஷி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பிரபல முன்னணி நடிகர்களின் படமான காலா, விசுவாசம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், நடிகர் கமலஹாசன் அவர்கள் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், சாக்ஷி ஒயிட் ஷாடோஸ் நடத்திய பேஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் பிரபலங்களான யாஷிகா ஆனந்த், ரேஷ்மா. அபிராமி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துக்க கொண்டு பேசிய … Read more

மதுரை ரயில்வே கோட்டத்தில் பணியமர்த்தப்பட்ட 90 சதவீதம் பேர் வெளிமாநிலத்தவர்கள்! 5 பேர் மட்டுமே தமிழர்கள்!

பொதுவாகவே மத்திய அரசு பணிகளில் வடமாநிலத்தாரின் ஆதிக்கம் அதிகமாகவே காணப்டுகிறது. இதில் தமிழகத்தில் ரயில்வே பணிகளில் அண்மைக்காலமாக பெரும்பாலும் வெளிமாநிலத்தவர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதற்கான காரணங்களாக தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்புகள் தொடர்பான விழிப்புணர்வு இல்லை என கூறப்படுகின்றன. தற்போது மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில்வே வேலைகளுக்க்கான மத்திய அரசு தேர்வானது 2017இல் நடைபெற்றது. இதற்கான பணிநியமனம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் 572 காலிப்பணியிடங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக வெளிமாநிலத்தவர்களே இடப்பிடித்துள்ளனர் … Read more