இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்ட பத்மநாபபுரம் அரண்மனை.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனை இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

கொரோனா அச்சம் காரணமாக அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டிருந்தது. அதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையும் அடங்கும். தற்போது, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன் விளைவாக சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 7 மாதங்களுக்கு பின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனை இன்று முதல் கொரோனா கட்டுபாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டுள்ளது. அரண்மனைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.