நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்-முத்தரசன்

நெல்லையில்  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், மிக பெரிய எண்ணிக்கையில் பா.ஜ.க. வெற்றி பெற்றாலும் அம்பேத்கார் உருவாக்கிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும். ஆனால் அவர்கள் ஆர்.எஸ்.எஸ். கொள்கையை செயல்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,நீட் தேர்வை மாநில அரசு ஆதரிக்கிறதா என்பதை வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும். வறட்சியான சூழலில் உள்ள நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கவேண்டும். வேலூர் தேர்தல் வெற்றி திமுக கூட்டணிக்கு எழுதிவைக்கப்பட்ட ஒன்று என்றும் தெரிவித்தார்.