சாதி கலவரத்தை தூண்டிவிடுவதே பா.ரஞ்சித், வைரமுத்து ஆகியோரின் நோக்கம்-ஹெச்.ராஜா

கடந்த சில நாட்களுக்கு முன் இயக்குனர் ரஞ்சித் ராஜராஜ சோழன் குறித்து கருத்து அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் கைது    செய்யப்படலாம் என்று கருதிய நிலையில், நீதிமன்றத்தில் முன் ஜாமின் வழங்கப்பட்டது.

நேற்று இயக்குனர் ரஞ்சித் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ராஜராஜ சோழன் உயிரோடு இருந்திருந்தால் என் விமர்சனத்தை ஏற்று உரையாட வந்து இருப்பார் என்று கூறினார்.

இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், குறிப்பிட்ட சமூகத்தினரின் நிலத்தை ராஜராஜ சோழன் அபகரித்ததாக பா.ரஞ்சித் கூறுவது பொய் .சாதி கலவரத்தை தூண்டிவிடுவதே பா.ரஞ்சித், வைரமுத்து ஆகியோரின் நோக்கம் ஆகும்.ராஜராஜசோழன் தற்போது உயிரோடு இருந்திருந்தால், இயக்குனர் ரஞ்சித் எந்த ஒரு கருத்தும் கூறியிருக்க மாட்டார். ராஜராஜசோழன் காலத்தில் தனி உடைமை, நிலவுடைமை என்பது கிடையாது என்று  ஹெச்.ராஜா தெரிவித்தார்.