ஆக்சிஜன் ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை..!

தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் என பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தொலைபேசியில் உரையாடினார்கள். கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பைக் கோரினார்கள். இதுதொடர்பாக, ஒன்றிய அரசுக்கு தமிழக அரசும் துணை நிற்கும் என உறுதியளித்தார்கள்.

தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கையான ஆக்சிஜன் தொடர்பாக, மாநிலத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள். இந்தக் கோரிக்கையை உடனடியாகப் பரிசீலிப்பதாக உறுதியளித்த பிரதமர் அவர்கள், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பரிசோதனைகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும்,  தொற்றால் அதிகம் பாதிக்கப்படாத நோயாளிகளை வீட்டில் இருக்கச் செய்து கண்காணிப்பதில் அதிக கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்கள்.

தமிழக முதலமைச்சர் அவர்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan