வெளியான அதிர்ச்சி தகவல் ! காணாமல் போன 20 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள்

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.வாக்கு என்னும் நாளும் நெருங்கி வருகிறது.கடந்த சில நாட்களாகவே தேர்தல் ஆணையம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றது.இந்த நிலையில் தேர்தல் ஆணையம் மீது ஒரு சர்ச்சை ஓன்று எழுந்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த மனோரஞ்சன் ராய் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையத்தில் தகவல் ஒன்றை பெற்றுள்ளார்.அதில்,இந்திய தேர்தல் ஆணையம் வாங்கிய  வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) 20 லட்சம் இயந்திரங்கள் காணாமல் போன அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.இதனால் மனோரஞ்சன் ராய் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்துள்ளார்.அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.20 லட்சம் இயந்திரங்கள் காணாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment