கொரோனாவால் எங்கள் இதயம் உடைந்து உள்ளது – விராட் கோலி மற்றும் அனுஷ்கா!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மக்களின் உயிரை கொத்துக்கொத்தாக எடுத்து வரும் நிலையில் தற்போது பலரும் இதற்காக நிதி உதவிகளை கொடுத்து வருகின்றனர். அண்மையில் கூட பிரதமர் அவர்களும் நிதி உதவியை முடிந்தவர்கள் வழங்குமாறும் அது பிற்காலத்தில் உதவும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து  நடிகை அனுஷ்காவும் அவரது கணவர் ஆகிய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் தொகை குறிப்பிடாமல் நிவாரண உதவி அளித்துள்ளதை அடுத்து, அவர்கள் தங்களது இணைய தள பக்கத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் படும் வேதனைகளை காணும்பொழுது எங்கள் இதயம் உடைந்து போகிறது. அவர்களுக்கு என்னால் முயன்ற உதவிகளை செய்கிறோம் இது ஏதேனும் ஒரு வகையில் மக்களின் துயர் தீர்க்கும் என நம்புகிறோம் என தெரிவித்து நிதி அளித்துள்ளனர்.

author avatar
Rebekal