#BREAKING: பப்ஜி மதனின் ஜாமீன் மனு மீது பதிலளிக்க உத்தரவு..!

#BREAKING: பப்ஜி மதனின் ஜாமீன் மனு மீது பதிலளிக்க உத்தரவு..!

பப்ஜி மதனின் ஜாமீன் மனு மீது பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பப்ஜி கேம் விளையாடும் போது சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி வீடியோ பதிவிட்டு வருவதாக யூடியூபர் பப்ஜி மதன் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பப்ஜி மதனை விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த புகாரில் தலைமறைவான மதன் கடந்த ஜூலை 18-ஆம் தேதி தருமபுரியில் வைத்து போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், ஜாமீன் கோரி மதன் மனுதாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் தம்மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை, பெண்களுக்கு  எதிராக கொடுமைகள்  ஏதும் செய்யவில்லை, காவல்துறை ஏற்கனவே என்னை காவலில் எடுத்து விசாரித்துள்ளதால் ஜாமீன் தேவை என நீதிமன்றத்தில் பப்ஜி மதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, வரும் திங்கள்கிழமை சென்னை சைபர் கிரைம் போலீசார் பதிலளிக்க நீதிபதி செல்வகுமார் உத்தரவு பிறப்பித்தார். ஏற்கனவே மதனின் மனைவிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் அப்போது மதனின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
murugan
Join our channel google news Youtube