ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்காலிக ஓய்வூதியம் வழங்க உத்தரவு!

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஓய்வு பெறக்கூடிய மத்திய அரசின் ஊழியர்களுக்கு ஓராண்டு வரை தற்காலிக ஓய்வூதியம் வழங்க மத்திய அரசு உத்தரவு.

உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், விடாமல் உழைக்கும் அரசு ஊழியர்களாகிய காவலர்கள், அமைச்சர்கள், மருத்துவர்கள் என அனைவருக்குமே ஓய்வில்லாத உழைப்பு தான் தற்பொழுது நடந்து வருகிறது. இந்நிலையில், வயது முதிர்வால் கொடுக்கப்படக்கூடிய ஓய்வு மற்றும் ஓய்வூதியம் இந்த வருடம் சற்றே வழக்கத்துக்கு மாறாக நடைபெறுகிறது.

அதாவது ஓய்வு பெறும் மத்திய  6 மாதங்களுக்கோ அல்லது 1 வருடத்திற்கோ தற்காலிக ஓய்வூதியம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், தடைபட்டுள்ள பணிகளால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேறகளுக்கு, தாமதமின்றி, ஓய்வு பெறும் தினத்திலேயே ஓய்வூதிய பட்டுவாடா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

author avatar
Rebekal