ஜனவரி-3 முதல் அமராவதி அணையிலிருந்து நீர் திறக்க உத்தரவு – முதல்வர் பழனிசாமி.!

அமராவதி அணையிலிருந்து வரும் ஜனவரி 3ம் தேதி முதல் பாசனத்திற்காக நீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் நீர் பாசனத்திற்காக அமராவதி அணையிலிருந்து நீர் திறந்து விட கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அந்த வகையில் அவர்களின் கோரிக்கை ஏற்று கொண்ட முதல்வர், அமராவதி அணையிலிருந்து வரும் ஜனவரி 3ம் தேதி முதல் பாசனத்திற்காக நீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அமராவதி அணையிலுள்ள நீர் இருப்பு மற்றும் வரவினை கருத்தில் கொண்டு ஜனவரி 3ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலான காலகட்டத்தில் தகுந்த இடைவெளி விட்டு விவசாயிகளின் நீர் பாசனத்திற்காக நீர் திறக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். திறந்து விடப்படும் இந்த நீர் மூலம் கரூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும் என்று கூறியுள்ளார்.