ஆரஞ்சு அலர்ட்.! பல மாவட்டங்களில் கனமழை.. 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.!!

ஆரஞ்சு அலர்ட்.! பல மாவட்டங்களில் கனமழை.. 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.!!

Orange Alert

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தில் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும், 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, ராமநாதபுரம், சிவகங்கை,புதுக்கோட்டை ,திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், விழுப்புரம் ,திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு எனவும், இதன் காரணமாக இந்த 3 மாவட்டங்களுக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube