ஓபிஎஸ் தரப்பு மண் குதிரை..! கரை சேராது..! – ஜெயகுமா

ஈரோடு கிழக்குத் தொகுதியில் 40 ஆயிரம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என ஜெயக்குமார் குற்றசாட்டு. 

சென்னையில் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹுவை சந்தித்த பின், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்குத் தொகுதியில் 238 பூத்கள் உள்ளன. போலியான வாக்குகள் செலுத்த முயற்சி நடக்கிறது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் 40 ஆயிரம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் . வாக்குகளை சரிபார்க்குமாறு வலியுறுத்தி மனு அளித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

மேலும்,செய்தியாளர்கள் ஈரோடு கிழக்கில் பாஜக வேட்பாளரை நிறுத்தினால், அதிமுக வேட்பாளர் திரும்பப்பெறப்படுமா? என கேள்வி எழுப்பினர். அதற்கு நாங்கள் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார். மேலும், ஓபிஎஸ் தரப்பு மண் குதிரை; கரை சேராது என்றும் விமர்சித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment