பாஜகவுடன் கூட்டணியா..?தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம்..!ஓபிஎஸ் பளீர்.!!

தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கோடநாடு விவகாரத்தில் முதல்வர் மீது மக்களின் பார்வை திரும்பியுள்ளது.

ஏனென்றால் கோடநாடு சம்பவங்கள் அனைத்திற்கும் காரணம் முதல்வர் என்று குற்றம் சாட்டிய நிலையில் இதற்கு அனைத்து தரப்பில் இருந்தும் எதிர்ப்புகளும் கேள்விகளும் எழுந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த துணைமுதல்வர் கோடநாடு கொள்ளை-கொலை நடந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அடிப்படை ஆதாரமில்லாமல் ஒரு பொய்யான தகவல்களை பரப்பப்புவதாக தெரிவித்த அவர் அரசியல் ரீதியாக அதிமுகவை எதிர்கொள்ள இயலாத எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆதாயம் கருதியே இது போன்ற சர்ச்சைகளை கிளப்புவதாக குற்றம்சாட்டினார்.

மேலும் தேர்தல் கூட்டணி  அமைப்பதற்கு பழைய நண்பர்களுக்கு கதவுகள் திறந்தே இருக்கின்றது என்று பிரதமர் மோடி அழைப்பு குறித்து கேட்டபோது தேர்தல் வரும் நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று ஓபிஎஸ் பதிலளித்தார். மேலும் தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் உரிய கூட்டணி மற்றும் மெகா கூட்டணி மக்கள் விரும்புகின்ற ஒரு கூட்டணியை உறுதியாக அமைக்கப்படும் என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.

author avatar
kavitha

Leave a Comment