ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியே ஆதரவு பதாகைகளை ஏந்தி நிற்கின்றனர்..!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஆளும் கட்சியான அ.தி.மு.க. இப்போதே தேர்தல் பணியை தொடங்கி உள்ளது. இதில் முதல் கட்டமாக கட்சியின் இன்று செயற்குழு கூட்டம்   தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

 இந்த கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் முறைப்படி அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது. இன்று கூடும் செயற்குழுஅ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறுகிறது.

இந்நிலையில், ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியே ஆதரவு பதாகைகளை ஏந்தி நிற்கின்றனர். ஓபிஎஸ் படத்தை முகமூடியாக அணிந்தபடி அவரது ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர். ஈபிஎஸ்தான் மீண்டும் முதல்வர் என்கிற பதாகையை ஏந்தி  அவரது ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

அதிமுக செயற்குழு கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் உள்பட யாரும் செல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை.  செல்போன்களை பயன்படுத்தாத வகையில் செயற்குழு கூட்டத்தில் ஜாமர் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று நடைபெற உள்ள அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
murugan