அரசின் இலவச திட்டங்களை எதிர்க்கட்சிகள் கொச்சைப்படுத்துகிறது – அமைச்சர் சி.வி.சண்முகம்….!!

தமிழக அரசின் திட்டங்களையும், இலவசங்களையும் எதிர்க்கட்சிகள் கொச்சைப்படுத்தி வருவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டி உள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் தலைமையில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் சிவி.சண்முகம், 351 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், உடல் நிலை சரியில்லாத போதும், சோதனைகள் அனைத்தையும் எதிர்கொண்டு, அத்தனை திட்டங்களையும் நிறைவேற்றியவர் ஜெயலலிதா என்று குறிப்பிட்டார். தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக, பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment