சிபிஐ-க்கு எதிராக எதிர்கட்சிகள் முழக்கம்: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு…!!

சிபிஐ பிரச்சனையை எழுப்பி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டன.

நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று காலை கூடியதும், மேற்கு வங்கத்தில் சிபிஐ நடந்து கொண்ட விதம் குறித்து திரிணாமூல் உள்பட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இரு அவைகளிலும் அலுவல்கள் பாதிக்கப்பட்டன.

பிற்பகல் இரண்டு மணி வரை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. பின்னர் அவை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு, மதியம் 2 மணிக்கு கூடிய நிலையில், பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்கட்சிகள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். எதிர்கட்சிகளின் தொடர் முழக்கங்களை அடுத்து, நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment