ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்த முடிவு.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கிட்டத்தட்ட 20 அமர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஆகஸ்ட் 13ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஆரம்ப முதல் தொடர்ச்சியாக பெகசஸ், வேளாண் சட்டம், விலை உயர்வு என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பி எதிரிக்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
மூன்று வாரங்களாக எதிரிக்கட்சிகளின் கடுமையான போராட்டம் காரணமாக நாடாளுமன்றம் கூட்டத்தொடர் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இன்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி தலைமையில் 14 எதிரிக்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது தொடர்பான வியூகம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த கூட்டத்தில், திமுக, ஆம்ஆத்மீ, இடசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட முக்கிய கட்சிகள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து நாடாளுமன்ற அருகே இருக்கக்கூடிய ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு எதிராக பெகசஸ் விவகாரத்தில் உரிய பதில் கிடைக்கும் வரை போராட்டம் தொடர வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…
Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…
Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…
Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…
Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…
TNPSC Group 4 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் லட்சக்கணக்கோர் எழுதும் மிக முக்கிய…