எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெறும் – சிபிஎம் பொதுச்செயலாளர்

எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெறும் – சிபிஎம் பொதுச்செயலாளர்

Sitaram Yechury

மாநிலகள் அளவில் பாஜகவை ஆட்சியில் அமரவிடாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சீதாராம் யெச்சூரி பேட்டி.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மரியாதையை நிமித்தமாக நடைபெற்றதாக கூறப்பட்டது.

இதன்பின், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீதாராம் யெச்சூரி, கர்நாடக தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் குறித்து முதலமைச்சரிடம் கலந்துரையாடினேன். எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெறும்.

இந்திய அரசமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க, மாநிலகள் அளவில் பாஜகவை ஆட்சியில் அமரவிடாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சிபிஎம் பொதுச்செயலாளர் சிதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். இன்று மாலை விழுப்புரத்தில் நடைபெறும் பட்டியலின, பழங்குடியினர் மாநாட்டில் சிதாராம் யெச்சூரி பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube