மஹாராஷ்டிராவில் விளையாட்டு அரங்கங்கள் திறப்பு !

மஹாராஷ்டிராவில், அம்மாநில அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது நான்காவது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது. 

இந்நிலையில், மஹாராஷ்டிராவில், அம்மாநில அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், சிவப்பு மண்டலங்களை தவிர மற்ற இடங்களில் 50% பயணிகளுடன் பேருந்துகளை இயக்கவும், வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள விளையாட்டு அரங்கம், மைதானங்களை திறக்கவும், சிவப்பு மண்டலத்தில் தொழிற்சாலைகள், கட்டுமான பணிகளுக்கு அனுமதி அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.