#BREAKING: 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு – அன்பில் மகேஷ்

ஜூன் 1ம் தேதி திட்டமிட்டபடி 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதாக அமைச்சர் அறிவிப்பு.

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறையில் உள்ளநிலையில், 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்றும் முன்பே அறிவிக்கப்பட்டது.

தற்போது, கோடை வெயிலால் பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என தகவல் பரவிய நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்தித்து பேசிய பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், திட்டமிட்டபடி பள்ளிகள் ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் என அறிவித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.