சிறப்பு வழிபாட்டுக்காக சபரிமலை கோயில் திறப்பு ..! இன்று முதல் கேரளாவில் தடை …!

கேரளாவில்  பம்பை, நிலக்கல், சன்னிதானம், இளவுங்கல் பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

சமீபத்தில் அனைத்து வயதுப் பெண்களுக்கும் கோயிலுக்குள் செல்லும் அனுமதி உண்டு எனத் தீர்ப்பு வழங்கி இருந்தது. அதை எதிர்த்து பா.ஜ.க உள்ளிட்ட பல அமைப்புகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

சிறப்பு வழிபாட்டுக்காக சபரிமலை கோயில் வரும் திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளதால் இன்று  இரவு முதல் நவம்பர் 6ஆம் தேதி வரை பம்பை, நிலக்கல், சன்னிதானம், இளவுங்கல் பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Leave a Comment