மக்களால் அங்கீகரிக்கப்பட்ட படங்களுக்கு மட்டுமே விருது வழங்க வேண்டும் : ஆர்.கே.செல்வமணி

இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் ஆவார். தமிழில் இவர் முதன்முதலாக இயக்கிய திரைப்படம் புலன் விசாரணை. அதனை தொடர்ந்து இவர் கேப்டன் பிரபாகரன், செம்பருத்தி அதிரடி படை போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய செல்வமணி, ‘மக்களால் அங்கீகரிக்கப்பட்ட படங்களுக்கு மட்டுமே மத்திய அரசு விருது வழங்க வேண்டும் என்றும், திரைப்படத்துறைக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தயாரித்த திரைப்படங்களுக்கு, அமெச்சூர் விருது வழங்கலாம் என்றும், விருதுகளை வழங்க சரியான விதிமுறைகளை மத்திய அரசு விதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.