பொதுவாக பெண்களுக்கு கண் இமை என்றால் சற்று அடர்த்தியாக இருந்தால் மிகவும் அழகாக இருக்கும். ஆனால் பலருக்கும் இது தான் பிரச்சனையே, கண் இமை மற்றும் கண்ணுக்கு மேலே உள்ள புருவத்தில் முடி அடர்த்தி குறைவாக இருப்பது அழகை குறைத்து காட்டும். இதன் அடர்த்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
தேவையானவை
- வைட்டமின் ஈ மாத்திரை
- ஆமணக்கு எண்ணெய்
உபயோகிக்கும் முறை
முதலில் வைட்டமின் E மாத்திரை எடுத்து அதிலிருந்து வரக்கூடிய ஜெல் மருந்தை ஒரு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெயுடன் நன்றாக கலக்கவும். இந்த கலவையை தினமும் இரவில் ஒரு சிறிய பஞ்சில் நனைத்து கண்கள் மற்றும் புருவங்களில் தடவி விட்டு தூங்கி காலையில் எழுந்து வழக்கம்போல முகத்தை கழுவிக் கொள்ளவும்.
இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால் இந்த மருந்தில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் கண்ணிமை முடியின் அடர்த்தி இருமடங்கு வலுவாக்குவதோடு மட்டுமல்லாமல் அதிகரிக்கவும் செய்கிறது.