ஆன்லைன் விளையாடு தடை மசோதா.! ஆளுநருக்கு தமிழக அரசு பதில் கடிதம்.!

ஆன்லைன் விளையாட்டு தடை மசோதா குறித்து விளக்கம் கேட்ட ஆளுநர் ரவிக்கு தமிழக அரசு பதில் விளக்க கடிதம் அனுப்பியுள்ளனர். 

கடந்த அக்டோபர் 19ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்து சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. சட்ட சபையில் நிறைவேற்றபட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க 6 வார கால அவகாசம் உண்டு அது இம்மாதம் 27ஆம் தேதி முடிவடைய உள்ளது.

இதனை அடுத்து நேற்று ஆளுநர் ரவி ஆன்லைன் தடை சட்ட மசோதாவுக்கு விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார். அதில், மசோதாவில் குறிப்பிடப்பட்டது போல சட்டத்தை மீறினால் தண்டனை விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறதா ? என கேள்வி எழுப்பியுள்ளார் ஆளுநர். இதற்கு தமிழக அரசு சார்பில் பதில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment