காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரை முதலமைச்சராக்க மஜத தயார்-டி.கே.சிவகுமார் தகவல்

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இணைந்து ஆட்சி ஆட்சி நடத்தி வருகிறது . இந்த நிலையில், இந்த அரசு மீது நம்பிக்கை இல்லை என்று கூறி 16 சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்கவில்லை. மேலும், பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தொடர்ந்து கூறி வந்தது. ஆனால் , சபாநாயகர் நடத்தவில்லை.மேலும் கர்நாடக சட்டப்பேரவையை இன்று  வரை ஒத்திவைத்து சபாநாயகர்  உத்தரவிட்டார்.

இந்த நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு பின்னர் கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  கர்நாடக அரசைக் காப்பாற்ற காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரை முதலமைச்சராக்க மஜத தயாராக இருக்கிறது. சித்தராமையா, பரமேஸ்வரா ஆகிய பெயர்களுள் ஒருவரை முதல்வராக நியமிக்க காங்கிரஸ் உயர்மட்ட குழுவிடம் மஜத தெரிவித்துள்ளது என்று தெரிவித்தார்.