சிறுவன் ஒருவன் ராணுவத்தினரை பார்த்து விறைப்பாக சல்யூட் அடித்தான். அவன், நேர்நிலையில் விறைப்பாக நின்று செய்த வணக்கம் ராணுவத்தினரை வெகுவாக கவர்ந்தது.
லடாக் யூனியன் பிரதேசத்தின் எல்லைப்பகுதிகளில் இந்திய-சீனா எல்லைப்பகுதியை ராணுவத்தின் இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினர் கண்காணித்து வருகின்றனர். இந்த படையில் ஒருபிரிவினர் சமீபத்தில் லடாக்கின் சுசுல் பகுதியில் சாலை வழியாக நடந்து சென்றனர். அப்போது உள்ளூர் பகுதியை சேர்ந்த நாம்கியால் என்ற சிறுவன் ஒருவன் ராணுவத்தினரை பார்த்து சுறுசுறுப்பாக சல்யூட் அடித்தான். நேர்நிலையில் விறைப்பாக நின்று அவன் செய்த வணக்கம் ராணுவத்தினரை வெகுவாக கவர்ந்தது. இதை வீரர் ஒருவர் வீடியோ எடுத்ததுடன், அது இந்தோ-திபெத் படையினரின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்திலும் வெளியிடப்பட்டது. இது நாடு முழுவதும் வைரல் ஆனது. ஊடகங்களிலும் இந்த வீடியோ குறித்த செய்தி வெளியாகி நாடு முழுவதிலும் இருந்து சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அந்த சிறுவனுக்கு நிதியுதவியும் அளிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் குஜராத்தை சேர்ந்த பாரதிய ஜனதா எம்.பி. ராஜீவ் சந்திரசேகர் தற்போது ரூ.2½ லட்சம் வழங்கி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘ராணுவத்தினருக்கு சிறப்பான வணக்கத்தை செலுத்தியதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டின் மரியாதையையும் அன்பையும் நாம்கியால் பெற்றுள்ளான். அவனது தேசப்பற்றை பாராட்டும் வகையில், அவனது கனவுகளை நிறைவேற்றும் வகையில் நிதியுதவிகளை மக்கள் வழங்கி வருகின்றனர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
மதுரை சித்திரை திருவிழா - சித்திரை திருவிழாவின் 9 ம் நாளான, நாளை நடைபெறும் திக் விஜயத்தின் சிறப்புகளை இப்பதிவில் காணலாம். மதுரை சித்திரை திருவிழா கோலா…
Election2024 : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் தங்கள் கோரிக்கையை முன்னிறுத்தி தேர்தலை புறக்கணித்து வருகின்றனர். தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று…
Election2024 : வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஓட்டு விழுவதாக சென்னை வியாசர்பாடியில் குற்றசாட்டு எழுந்துள்ளது. சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள…
Election2024 : தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாடாளுமன்ற தேர்தல்…
ஐபிஎல் 2024 : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவதாக பந்துவீசியதால் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில்…
Virat Kohli : ஜெய்ப்பூரில் உள்ள மெழுகு அருங்காட்சியத்தில் விராட் கோலியின் மெழுகு சிலையை திறந்துள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன விராட் கோலியின் மெழுகு…