ஓணம் பண்டிகைக்கு அதிர்ஷ்ட தேவதையாக வந்த 12 கோடி பரிசு! நகைக்கடை ஊழியர்களுக்கு அடித்த ஜேக்பாட்!

கேரள மாநிலத்தில் லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, திருவோணம் பம்பர் லாட்டரி நிறுவனம், 12 கோடி பரிசுத்தொகை கொண்ட லாட்டரிகளை விற்பனை செய்தது. இதன் ஒரு லாட்டரி விலை, 300 ரூபாயாக நிர்ணயித்திருந்தது.

இந்த லாட்டரியை கொல்லத்தில் இரு நகைக்கடையில் வேலைபார்க்கும் ஊழியர்க்ள 6 பேர் நபர் ஒன்றுக்கு 50 வீதம் சேர்த்து 300 ரூபாய்க்கு லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளனர். இந்த லாட்டரி எண்ணிற்கு தான் தற்போது முதல் பரிசு வாங்கியுள்ளது. இந்த லாட்டரி டிக்கெட், மொத்த பரிசு தொகை 12 கோடி ஆகும், இதில் முதல் பரிசு தொகை 6.18 கோடியாகும்.

பரிசுத்தொகை விழுந்தவுடன், என்ன செய்வது என்றே தெரியவில்லை அவ்வளவு சந்தோசமாக இருக்கிறது. என குறிப்பிட்டார்கள். இந்த பணத்தை என்ன செய்வது என நகை கடை ஊழியர்கள் தற்போது யோசித்து வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.