நம்மில் அனைவருமே முட்டையை வைத்து செய்யக்கூடிய அனைத்து வகையான உணவுகளையும் விரும்பி சாப்பிடுவதுண்டு. அதிலும் பலர் ஆம்லெட், ஆஃபாயிலை வீட்டில் மட்டுமல்லாது, ரோட்டிலும் கூட எங்கு கண்டாலும் வாங்கி சாப்பிடுவர்.
இந்த பதிவில், முட்டையே இல்லாமல், காய்கறிகளை வைத்து சுவையான ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்ப்போம். காய்கறிகள் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துக்கள் நிறைந்தது. இது நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தேவையானவை
- கடலை மாவு – 1 கப்
- அரிசிமாவு – 2 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- வெங்காயம் – 1 நறுக்கியது
- பச்சைமிளகாய் – 2 நறுக்கியது
- குடைமிளகாய் – 1
- தக்காளி – 1
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
செய்முறை (Eggless Omelette)
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பவுலில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் குடைமிளகாய், தக்காளி, மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிய சிறிய ஆம்லெட் போல ஊற்றி பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான முட்டை இல்லாத காய்கறி ஆம்லெட் தயார்.
நாம் நமது வீடுகளில் சில சமயங்களில் முட்டை நேரத்தில் இவ்வாறு காய்கறிகளை வைத்து செய்து கொடுத்தால் அனைவருமே விரும்பி சாப்பிடுவர். இவ்வாறு செய்து கொடுப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உணவில் காய்கறிகளை சேர்த்து சாப்பிட்ட திருப்தியும் காணப்படும்.