இந்திய பிரதமர் மோடியுடன் ஒலிம்பிக் வீரர் வீராங்கனைகள் இன்று சந்தித்து பேசியுள்ளனர்.
ஒலிம்பிக் 32 ஆவது போட்டி டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடந்து முடிந்தது. இந்த போட்டியில் இந்தியாவிலிருந்து 126 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் 7 ஒலிம்பிக் பதக்கங்களை இந்தியாவிற்காக பெற்று தந்து வரலாற்று சாதனை படைத்தனர். இவை 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் பதக்கங்கள் ஆகும்.
ஈட்டி எறிதலில் இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் பெற்று கொடுத்து சிறப்புமிக்க சாதனை படைத்தார். இதனை அடுத்து பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு மற்றும் மல்யுத்த போட்டியில் ரவிக்குமார் தஹியா ஆகியோர் வெள்ளிப்பதக்கம் பெற்றனர். இதனை அடுத்து பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து, இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, குத்துசண்டை வீராங்கனை லவ்லினா, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றனர்.
மேலும், பி.வி.சிந்து ஏற்கனவே ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் பெற்றதால் இரண்டு ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையாக பெருமை அடைந்துள்ளார். இந்நிலையில் ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பல்வேறு பரிசுகள், ரொக்க பணம், கார், வீடு, அரசு வேலை ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒலிம்பிக்கில் பங்குகொண்ட வீரர்களுக்கு பாராட்டு விழாக்களும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒலிம்பிக் விளையாட்டில் பங்கு கொண்ட வீரர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார். இதனை தொடர்ந்து தற்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒலிம்பிக்கில் பங்கு கொண்ட அனைத்து வீரர்களுக்கும் அவரது இல்லத்தில் காலை உணவு அளித்து சந்தித்து பேசினார். அதில் பதக்கம் வென்ற வீரர்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து பேசியுள்ளார். இதனை அடுத்து ஒலிம்பிக்கில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…
ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…
Rishabh Pant : ரிஷப் பண்ட் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…