5 வயது சிறுமியின் உயிரை காவு வாங்கிய பழைய பிரியாணி

பழைய பிரியாணியை சாப்பிட்ட 5 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அரக்கோணம், தண்டலம், புதுக் காலனி பகுதியில் வசிப்பவர், சீனிவாசன் மற்றும் கனகா தம்பதியினர். இவர்களுக்கு 5 வயதில் கோபிகா என்ற பெண்குழந்தை உள்ளது.

இந்நிலையில், இவர்கள் பழைய பிரியாணியை பிரிட்ஜில் வைத்து, மறுநாள் கோபிகாவுக்கு சுட வைத்து கொடுத்துள்ளார். இதனை சாப்பிட்ட கோபிகா வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment