தூதுவளை செடி நம் அனைவருக்குமே தெரிந்த ஒரு மூலிகை செடியாகும். இது அதிக மருத்துவ குணங்கள் கொண்டது. இது நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. தூதுவளை இலையை போல, தூதுவளை பூவிலும் பல்வேறு நன்மைகள் உள்ளது.
தூதுவளை பூவைப் பயன்படுத்தி பல வகையான உணவுகள் மற்றும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தற்போது இந்த பதிவில் தூதுவளை பூவில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம்.
மருத்துவ குணங்கள்
தூதுவளை பூவில் உள்ள யூஜினால் மற்றும் ஃபார்னெசில் அசிட்டேட் போன்ற வேதிப்பொருட்கள் இருமல் மற்றும் சளிக்கு மருந்தாக பயன்படுகிறது. இந்த பூ தொண்டையை சுத்தப்படுத்தவும், சளியை வெளியேற்றவும் உதவுகிறது. இந்த பூவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, உடலை நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது.
வாய் துர்நாற்றம் பிரச்சனை உள்ளவர்கள், பூவை அவித்து அந்த தண்ணீரை குடித்தால், பூவில் உள்ள யூஜினால் வாயில் உள்ள பாக்டீரியாக்களுடன் போராடுகிறது. அதேபோல், தூதுவளை பூவில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை சுத்தப்படுத்தவும், புதுப்பிக்கவும், பளபளப்பாக்கவும் உதவுகிறது.
தூதுவளை பூவில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தலைவலி மற்றும் மூட்டு வலியை குணப்படுத்த உதவுகிறது. மேலும், தூதுவளை பூவில் உள்ள யூஜினால் மாதவிடாய் வலியை குறைக்க உதவுகிறது.
பூவை எப்படி பயன்படுத்தலாம்?
இந்த பூவை பிடுங்கி சுத்தம் செய்து, தண்ணீரில் அலசி, பின் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அந்த பூக்களை அதில் போட்டு அவித்து, அந்த தண்ணீரை குடிக்கலாம்.
தூதுவளை பூ ரசம்
தூதுவளை பூவை சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்கறிகளை வதக்கவும். காய்கறிகள் நன்கு வதங்கியதும், மசாலா சேர்த்து வதக்கவும். மசாலா நன்கு வதங்கியதும், தூதுவளை பூ சேர்த்து கிளறவும். சிறிது தண்ணீர் சேர்த்து, ரசம் கொதித்ததும், உப்பு சேர்த்து பரிமாறலாம்.