இந்தூரில் மருத்துவமனை ஒன்றில் 32 பேர் கருப்பு பூஞ்சையால் இறப்பு – மருத்துவமனை வளாகம் அதிர்ச்சி தகவல் !
இந்தியாவில் கொரோனாவின் 2 வது அலை ஒரு புரம் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் இந்த சூழலில் தற்போது புதிதாக பூஞ்சைத் தொற்றுகளாலும் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றது.
தற்போது இந்தியாவில் கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் என வித விதமாக பூஞ்சை தொற்றுகள் பரவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகள் பூஞ்சை தொற்றுகளைப் பற்றி மக்கள் அச்சப்பட வேண்டாம் என அறிவுறுத்தியிறுந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரத்தில் உள்ள அரசு நடத்தும் மருத்துவமனையில் கடந்த 20 நாட்களில் மியூகோர்மைகோசிஸ் எனும் கருப்பு பூஞ்சையால் 32 நோயாளிகள் இறந்ததாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தூரில் உள்ள மகாராஜா யேஷ்வந்த்ராவ் மருத்துவமனை (எம்.ஒய்.எச்) மத்திய பிரதேசத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.
அங்கு மே 13 ஆம் தேதி கருப்பு பூஞ்சையின் முதல் நோயாளி அனுமதிக்கப்பட்டார், அதைத்தொடர்ந்து 439 பேர் கருப்பு பூஞ்சையாள் புதியதாக பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 84 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதில் 14 பேருக்கு கொரோனா இருந்ததாகவும், மேலும் 301 பேர் கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் என்றும் மீதமுள்ள 8 பேருக்கு கொரோனா இல்லை என்றும் (எம்.ஒய்.எச்) கண்காணிப்பாளர் பிரமேந்திர தாகூர் கூறியுள்ளார்.
அதனிடையே 20 நாளில் 32 நோயளிகள் கருப்பு பூஞ்சையாள் இறந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற கடந்த 20 நாட்களில் 200 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டோம் என தாகூர் கூறியுள்ளார்.
தற்போது 323 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Summer Holiday: தமிழகத்தில் இன்று முதல் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக நடந்து…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரில் இன்றைய 40-தாவது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ்அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
IPL2024: லக்னோ அணி 19.3 ஓவரில் 4 விக்கெட்டைகளை இழந்து 213 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின்…
Rutruaj Gaikwad : இன்றைய போட்டியில் வழக்கமாக களமிறங்கும் ரச்சின் ரவீந்திரா இடம்பெறாததற்கு ருதுராஜ் காரணம் கூறி இருந்தார். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை அணியும், லக்னோ…
PM Modi : பிரச்சாரத்தின் போது வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் மோடி பேசியதாக கூறி அவர் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா காரத்…
Realme Narzo 70 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த மொபைலான ரியல்மி நார்ஸோ 70 5G மற்றும் ரியல்மி நார்ஸோ 70x 5G என்ற இரு…