மத்திய அரசு துறையில் அதிகாரி பணி..,

மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 120 பணியிடங்களை நிரப்ப யூ.பி.எஸ்.சி. அமைப்பு  தற்போது அறிவித்துள்ளது. தற்போது கொடுத்த அட்டவணையின் படி  உதவி புவியியலாளர் பணிக்கு மட்டும் 75 இடங்களும், அட்மின் ஆபீசர் பணிக்கு 16 இடங்களும் கொடுக்கபட்டுள்ளன. இவை தவிர மார்க்கெட்டிங் மேனேஜர், பிஸியாலஜி சிறப்பு மருத்துவ உதவி பேராசிரியர், பிளாஸ்டிக் சர்ஜரி உதவி பேராசிரியர், சட்ட அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களும் உள்ளன.

அதிகபட்சம் 50 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப் படுகிறது. விண்ணப்பதாரர்கள் ரூ.25 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு  www.upsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும். 3-5-2018- விண்ணப்பம் செய்ய கடைசி தேதியாகும்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment