ஒடிசாவின் முதல் வந்தே பாரத்… கொடியசைத்து தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி.!

ஒடிசாவின் முதல் வந்தே பாரத்… கொடியசைத்து தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி.!

Odisha vandeBharath 1st

ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஒடிசா மாநிலம் பூரியிலிருந்து மேற்குவங்க மாநிலம் ஹவுரா வரை செல்லும் ஒடிசாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இன்று பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஒடிசாவின் பூரி மற்றும் மேற்கு வங்க மாநிலம் ஹவுரா இடையே இந்த ரயில் இயக்கப்படும்.

இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசாவில் உள்ள கோர்தா, கட்டாக், ஜாஜ்பூர், பத்ரக் மற்றும் பாலசோர் மாவட்டங்கள் வழியாகவும், மேற்கு வங்கத்தில் உள்ள பாஸ்சிம் மெதினிபூர் மற்றும் பூர்பா மேதினிபூர் மாவட்டங்கள் வழியாகவும் செல்லும் எனவும், ஜெகநாதர் கோயில் மற்றும் கோனார்க் கோயிலுக்குச் செல்லும் யாத்ரீகர்களுக்கு இது மேலும் பயனளிக்கும் எனவும் ரயில்வே தெரிவித்துள்ளது.

author avatar
Muthu Kumar
Join our channel google news Youtube