ஒடிசாவில் எம்.எல்.ஏ வீட்டின் மீது குண்டுகள் வீசப்பட்டுள்ளது – 4 பேர் காயம்!

ஒடிசாவில் உள்ள எம்.எல்.ஏவின் இரு வீட்டின் மீது குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் ஆளும் பிஜேடி எம்எல்ஏ சூரிய மணி பைத்யா அவர்களின் இரு வீடுகள் மீது கச்சா வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கட்சி ஆதரவாளர்கள் 4 பேர் காயமடைந்துள்ளனர். அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கேஷபூர் கிராமத்தில் உள்ள பதனா சாஹி, சட்டமன்ற உறுப்பினர்களின் குடியிருப்பு மற்றும் நிர்மல்ஜாரில் உள்ள அவரது வாடகை வீடு மீது குண்டுகளை வீசியுள்ளனர்.

இந்த சம்பவம் நடந்த பொழுது பைத்யா அவர்கள் ஒரு கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்று இருந்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பின் நிர்மல்ஜாரில் உள்ள அவரது இல்லத்திற்கு விரைந்துள்ளார். பின் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்த குண்டு வெடிப்புக்கு காரணம் அரசியல் போட்டியாக இருக்கலாம் என்று சந்தேகித்துள்ளனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த பின்பு இரு இடங்களிலும் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், ஆனால் இந்த குண்டு வீசியது யார் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை எனவும் போலீஸ் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Rebekal

Recent Posts

வெள்ளத்தில் மூழ்கிய கென்யா..பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு.!

Kenya floods: கென்யாவின் பல பகுதிகளில் வெள்ளம் அடித்துச் சென்றதில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழை காரணமாக…

20 mins ago

ரன் இயந்திரத்தை கட்டுப்படுத்துமா பெங்களூரு ? ஹைத்ராபாத்துடன் இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதராபாத் அணியும், பெங்களுரு அணியும் மோதுகிறது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 41-வது போட்டியாக…

43 mins ago

பள்ளிகள் திறப்பு தேதியை அறிவித்த முதல் மாவட்டம்.! எங்கு தெரியுமா?

School Reopen: ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக…

50 mins ago

DCvGT: கடைசிவரை போராடிய குஜராத்.. டெல்லி அபார வெற்றி..!

IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்  இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…

8 hours ago

இனி உள்நாட்டு கிரிக்கெட் வீரரும் ரூ.1 கோடி சம்பாதிக்கலாம்!! அதிரடி திட்டம் போடும் பிசிசிஐ !

BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…

10 hours ago

ஹர்திக் இல்ல ..சந்தீப் உள்ள ..? இது புதுசா இருக்கே ..டி20 அணியை அறிவித்த சேவாக் !!

Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…

11 hours ago