ஒடிசாவில் மாவோயிஸ்ட்-பாதுகாப்பு படையினருக்கு இடையே நடந்த துப்பாக்கிசூடு.. மாவோயிஸ்ட் நான்கு பேர் சுட்டுக்கொலை!

ஒடிசாவில் மாவோயிஸ்ட் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் நான்கு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

ஒடிஷா மாநிலம், காந்தமால் மாவட்டத்திலுள்ள சிர்லா காட்டில் மாவோயிஸ்ட் முகாமிட்டதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்று அதிகாலையில் அந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்பொழுது அங்கிருந்த மாவோயிஸ்ட் மற்றும் வீரர்களுக்கு இடையே கடுமையான துப்பாக்கி சூடு நடந்தது.

அந்த துப்பாக்கி சூட்டில் மாவோயிஸ்டுகள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மாவோயிஸ்ட், கே.கே.பி.என் பிரிவின் உறுப்பினர்கள் என தெரியவந்தது. அவர்களிடமிருந்து மூன்று உரிமம் பெற்ற துப்பாக்கி, இரண்டு நாட்டு கைத்துப்பாக்கி, மற்றும் பல ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.