ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்பாக இருந்தாலும் அதிமுக ஆட்சிக்காலத்தில் அனுமதி கொடுக்கவில்லை என ஜெயக்குமார் பேட்டி.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓசி டிக்கெட் என சொல்லி பெண்களை அவமானப்படுத்தியுள்ளார் அமைச்சர் பொன்முடி. திமுக அமைச்சர்கள் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். சட்டம் – ஒழுங்கு பிரச்னை தொடர்ந்தால் திமுக ஆட்சி கலைக்கப்படும். ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்பாக இருந்தாலும் அதிமுக ஆட்சிக் காலத்தில் அனுமதி கொடுக்கவில்லை. திமுகவின் இரட்டை வேடத்தால் பொதுமக்கள் பயந்துள்ளனர் என தெரிவித்தார்.