#BREAKING: நளினி, ரவிச்சந்திரனின் மனுக்கள் தள்ளுபடி!

#BREAKING: நளினி, ரவிச்சந்திரனின் மனுக்கள் தள்ளுபடி!

தங்களை விடுவிக்க உத்தரவிடக்கோரி நளினி, ரவிசந்திரன் தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தங்களை விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னதாக வழக்கு தொடுத்திருந்தனர். இந்த நிலையில், தங்களை விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி நளினி, ரவிசந்திரன் தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

இந்த வழக்கு விசாரணையின்போது, உச்சநீதிமன்றத்தை போல் சென்னை உயர் நீதிமன்றம் அதிகாரத்தை பயன்படுத்தி விடுவிக்க உத்தரவிட முடியாது என மறுத்துள்ளது. தமிழக அரசின் தீர்மானத்தின் அடிப்படையில் தங்களை விடுவிக்க நளினியும், ரவிச்சந்திரனும் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில், ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *