தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ராஜா கிருஷ்ணமூர்த்தி 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்டதற்கு ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் பிறந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி கடந்த 2016-ல் முதல் முறையாக பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், தற்போது நடந்த தேர்தலில் லிபர்டேரியன் கட்சியின் பிரஸ்டன் நெல்சனை தோற்கடித்து இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜனநாயக காங்கிரஸ்காரரான ராஜா கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, இவருக்கு பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில், திரு.ராஜா கிருஷ்ணமூர்த்திக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ்காரர், தொடர்ந்து மூன்றாவது முறையாக அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பெற்றோர் எங்கள் சொந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இது உண்மையில் தமிழ்நாட்டிற்கு ஒரு பெருமை என்று தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…
Rishabh Pant : ரிஷப் பண்ட் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…
IB Recruitment 2024 : உள்துறை அமைச்சகம் - உளவுத்துறை பணியகம் (IB) தற்போது மொத்தம் 660 காலியிட பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்துறை மற்றும் உளவுத்துறை பணியகத்தில்…