கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய செவிலியர் திடீரென உயிரிழப்பு!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பிய செவிலியர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

ராமநாதபுரம் மாவட்டம், பாண்டியூரில் வசித்து வருபவர் இளையராஜா. இவருக்கு கலைச்செல்வி என்ற 38 வயது மனைவி உள்ளது. கலைச்செல்வி, கடந்த 8 ஆண்டுகளாக ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீடு திட்ட பிரிவில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு கடந்த மாதம், 28 -ம் தேதி கொரோனா அறிகுறி தென்பட்ட நிலையில், தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு, கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அப்பொழுது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. முதலில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூன்று நாட்களுக்கு பின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர், கடந்த சில தினங்களுக்கு முன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீட்டிலே தனிமைப்படுத்திக்கொண்டு வந்தார். இந்தநிலையில், வீட்டில் தனிமையில் இருந்த கலைச்செல்வி, நேற்று உயிரிழந்தார். இது, அப்பகுதி மக்களிடம் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Recent Posts

கிரிக்கெட் கேரியரில் சிறந்த தருணம் அது தான் !! தோனியை புகழ்ந்த ராகுல் !

ஐபிஎல் 2024 : லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் எம்.எஸ்.தோனியை புகழ்ந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் 33-வது போட்டியாக…

17 mins ago

அட்ராசக்க! 5,500Mah பேட்டரி..50MP கேமரா..அசத்தல் அம்சங்களுடன் வருகிறது vivo V30e 5G!

Vivo V30e  : வி30இ 5ஜி போன் எப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விவோ நிறுவனம் அடுத்ததாக வி30இ 5ஜி (vivo V30e…

19 mins ago

மதுரை சித்திரை திருவிழா 2024.! திக் விஜயத்தின் சிறப்புகளை தெரிஞ்சுக்கோங்க .!

மதுரை சித்திரை திருவிழா - சித்திரை திருவிழாவின் 9 ம் நாளான, நாளை நடைபெறும் திக் விஜயத்தின் சிறப்புகளை இப்பதிவில் காணலாம். மதுரை சித்திரை திருவிழா கோலா…

56 mins ago

தமிழகத்தில் தேர்தலை புறக்கணித்த வாக்காளர்கள்… எந்தெந்த இடங்களில் தெரியுமா.?

Election2024 : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் தங்கள் கோரிக்கையை முன்னிறுத்தி தேர்தலை புறக்கணித்து வருகின்றனர். தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று…

1 hour ago

எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஒட்டு.? சென்னை வாக்குசாவடியில் சலசலப்பு.!

Election2024 : வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஓட்டு விழுவதாக சென்னை வியாசர்பாடியில் குற்றசாட்டு எழுந்துள்ளது. சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள…

2 hours ago

நண்பகல் வரையில் வாக்குப்பதிவு நிலவரம்… தமிழகத்தை முந்திய புதுச்சேரி.!

Election2024 : தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாடாளுமன்ற தேர்தல்…

2 hours ago