கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய செவிலியர் திடீரென உயிரிழப்பு!

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய செவிலியர் திடீரென உயிரிழப்பு!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பிய செவிலியர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

ராமநாதபுரம் மாவட்டம், பாண்டியூரில் வசித்து வருபவர் இளையராஜா. இவருக்கு கலைச்செல்வி என்ற 38 வயது மனைவி உள்ளது. கலைச்செல்வி, கடந்த 8 ஆண்டுகளாக ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீடு திட்ட பிரிவில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு கடந்த மாதம், 28 -ம் தேதி கொரோனா அறிகுறி தென்பட்ட நிலையில், தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு, கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அப்பொழுது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. முதலில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூன்று நாட்களுக்கு பின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர், கடந்த சில தினங்களுக்கு முன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீட்டிலே தனிமைப்படுத்திக்கொண்டு வந்தார். இந்தநிலையில், வீட்டில் தனிமையில் இருந்த கலைச்செல்வி, நேற்று உயிரிழந்தார். இது, அப்பகுதி மக்களிடம் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Join our channel google news Youtube