குடியுரிமை திருத்த சட்டம்… சென்னை பாரிமுனையில் இஸ்லாம் அமைப்பினர் சிறை நிரப்பும் போராட்டம்… பரபரப்பில் தமிழகம்…

குடியுரிமை திருத்த சட்டம்… சென்னை பாரிமுனையில் இஸ்லாம் அமைப்பினர் சிறை நிரப்பும் போராட்டம்… பரபரப்பில் தமிழகம்…

குடியுரிமை திருத்த சட்ட  மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும், மக்கள் தொகை கணக்கெடுப்பை நிறுத்த  கோரியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் சென்னை  பாரிமுனை குறளகம் அருகே நேற்று  நடைபெற்றது.  இதில்,  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் 36 மாவட்டங்களில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென அரசை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள்   சென்னை உயர் நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையம் அருகில், குறளகம் முதலாக பாரிமுனை சிக்னல் வரையில் சுமார்  மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது, அவர்கள் கையில் குடியுரிமை சட்டம் குறித்தபதாகைகளையும், இந்திய தேசியக்கொடியையும் ஏந்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தின்போது ஏதும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க 300க்கும் மேற்பட்ட சீர்மிகு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

author avatar
Kaliraj
Join our channel google news Youtube