இப்போது மோடி சொல்வதை எப்போதோ செய்துவிட்ட மாநிலம் தமிழ்நாடு – ஆளூர் ஷா நவாஸ்

இப்போது மோடி சொல்வதை எப்போதோ செய்துவிட்ட மாநிலம் தமிழ்நாடு என ஆளூர் ஷா நவாஸ் ட்வீட். 

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், நேற்று குஜராத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை காணொளி மூலம் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், அடுத்த 10 ஆண்டுகளில் மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்பதை  மத்திய அரசு இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது என தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து, ஆளூர் ஷா நவாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும் என மோடி தெரிவித்துள்ளார். இப்போது மோடி சொல்வதை எப்போதோ செய்துவிட்ட மாநிலம் தமிழ்நாடு. அதுபோல், புதிய கல்வி கொள்கையின் இலக்கான 2030-இல் 50% GER என்பதையும் ஏற்கெனவே எட்டிவிட்டது தமிழ்நாடு. எனவே தமிழ்நாட்டை பாஜக பின்பற்றவும்!’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.